Posted on Leave a comment

மறதி, மற்றும் நினைவாற்றல்

மனிதனுக்குள்ள மறதி, மற்றும் நினைவாற்றல் இரண்டுமே பயனுள்ள திறன்கள். மறக்கும் சக்தி இன்னும் முக்கியமானது, இல்லையெனில் மனிதன் பல்லாயிரக்கணக்கான முந்தைய பிறப்புகளில் இருந்த பல்லாயிரக்கணக்கான பெற்றோர்களையும், உறவினர்களையும் இழந்ததைப் பற்றி புலம்ப வேண்டியிருக்கும்; மேலும், இந்த பிறப்பில் மனிதன் அனுபவித்த பல அவமானங்களை நினைவில் வைத்துக் கொள்வான். அதிர்ஷ்டவசமாக அவன் அதையெல்லாம் மறந்து விடுகிறான் . அவன் குறிப்பிடத்தக்க, அல்லது முக்கியமான, அதாவது அவனது திருமண தேதி, அவனுக்கு பணம் செலுத்த வேண்டியவர்களின் பெயர்கள் போன்றவற்றை மட்டுமே அவன் நினைவில் வைத்திருக்கிறான் . சோகம் என்னவென்றால், தான் இந்த உலகத்திற்கு எதற்காக வந்தோம் என்பதையே மறந்துவிட்டான். அவனது உண்மையான இயல்பு மற்றும் அடையாளத்தை மறந்தே போய்விட்டான்.

Leave a Reply